Tuesday, 15 November 2016

எச்சரிக்கை #சங்கரபதி_கோட்டையை காக தேவர் இனம் களம் காண நேரிடும்..



பராமரிப்பின்றி காணப்படும் வரலாற்று சிறப்பு மிக்க முக்குலத்து மாமன்னர்கள் #மருதுபாண்டியர்கள் #ஊமைத்துரை யை ஒளித்து வைத்த #சங்கரபதி_கோட்டை

====================
சிவகங்கை அருகே வரலாற்று சிறப்புமிக்க #சங்கரபதி_கோட்டை யை தமிழக அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஆண்டுகள் பல ஆகியும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை ,
சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட போர் பயிற்சி களமாக பயன்படுத்தியதுதான் இந்த சங்கரபதி கோட்டை. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டை 200 ஆண்டுகள் பழமையான கோட்டை. இந்த கோட்டையில் யானை படைகளுக்கும், குதிரை படைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் பறை சாற்றுகின்றன.

சங்கரபதி கோட்டை தூண்கள் சுடாத செங்கற்கல் , கருப்பட்டி , கடுக்காய் மற்றும் முட்டையின் வெள்ளை கருக்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இப்படி வரலாற்றின் சின்னமாக பதிவு செய்யப்பட்ட இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து கிடக்கிறது,

சிறப்புமிக்க இக்கோட்டை கட்டப்பட்ட ஆண்டுக்கான கல்வெட்டு மற்றும் ஆவணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. ஆண்டுகள் தாண்டினாலும் இக்கோட்டையின் சுவர்களும் தூண்களும் இன்றுவரை கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கின்றன.

இந்த கோட்டையிலிருந்து மருது சகோதரர்களின் சொந்த பூமியான காளையார் கோவிலுக்கும், சிவகங்கை அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருக்கிறது,
கட்ட பொம்மனின் தம்பி ஊமத்துரை இங்குதான் மறைந்து வைத்திருந்தனர்,
இத்தனை சிறப்பு பெற்ற இக்கோட்டை இன்று தனது பெருமையை இழந்து காட்டு செடிகள் மண்டி சமூக விரோதிகளின் உறைவிடமாக மாறியுள்ளது . இக்கோட்டை சுற்றுத்தளமாக அறிவிக்கப்பட்டது. இது முக்குலத்து மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்த போதிலும், அந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாக மாறிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் தேவர் சமூக மக்கள்,



காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று சிறப்புகளையும் பெருமைகளையும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அரசின் கடைமை. அப்படி போற்றிப் பாதுகாக்க வேண்டிய சங்கரபதி கோட்டையை சுற்றுலாத்தளமாக மாற்றும் அறிவிப்பு பெயரளில் நின்றுவிடாமல் உண்மையிலேயே சுற்றுலாத்தளமாக மாற்றப்பட வேண்டும் முக்குலத்து மக்களுக்கு மட்டும் அல்ல விடுதலை போராட்ட தியாகிகள் வாழ்ந்த இடத்தை காப்பது தமிழக அரசின் கடமை, இல்லைஎன்றால் கடும்விளைவுகளை சந்திக்க நேரிடும் ...

Tuesday, 28 June 2016

பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்: சில நினைவுகள், குறிப்புகள்

16/08/2015

இன்று ஆகஸ்ட் 16 –  சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.

எல்டிடிஇ தறுதலை விடுதலைப் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட பலப்பல மகத்தான 'தமிழ் ஈழத்' தலைவர்களில் இந்த சின்னபாலாவும் ('ஐயர் பாலா' அல்லது 'ஈரோஸ் பாலா' என்றும் அறியப்பட்ட) ஒருவர். (ஜூன் 6, 1957 - ஆகஸ்ட் 16, 2004)
எல்டிடிஇ தறுதலை விடுதலைப் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட பலப்பல மகத்தான ‘தமிழ் ஈழத்’  தலைவர்களில் இந்த சின்னபாலாவும் (‘ஐயர் பாலா’ அல்லது ‘ஈரோஸ் பாலா’ என்றும் அறியப்பட்ட) ஒருவர். (ஜூன் 6, 1957 – ஆகஸ்ட் 16, 2004)
…இரண்டு நாட்களாகவே மனம் ஒரு பிடியில் இல்லை. ஸ்ரீலங்கா தமிழர்கள் அமைதியாக வாழ, முன்னேற்றம் காண இருந்த/அமைந்த ஒவ்வொருசாத்தியக் கூற்றையும், அற்ப சுய நலத்துக்காக பேடித்தனமாக  அழித்த அந்த அயோக்கிய விடுதலைப் புலிகளையும், கொலைகாரப் பிரபாகரன்களையும் நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது.
நம் தமிழக இளைஞ அரைகுறைகள் பலர், ஒரு எழவையும் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல்,  ‘தமிழ் ஈழம் அமையும்’ என்றெல்லாம் இங்கேயேபாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு உளறிக்கொட்டுவது இன்னமும் வெறுப்பை வளர்க்கிறது.
இதற்குக் காரணம்: என் குறிப்புகளைப் புரட்டியபோது கிடைத்த, அசைபோட்ட, பலப்பல சோக நிகழ்வுகளில், ரேலங்கி செல்வராஜா குறித்த விஷயங்களும், மிகமிக முக்கியமாக, என் மரியாதைக்குரியவராக இருந்த ‘சின்ன பாலா’ பற்றிய செய்திகளும்தான். :-(
ஆக எழுத ஆரம்பிக்கிறேன். மகத்தான ஷங்கர் குஹா நியோகிகளை, ராஜனி திராணகமக்களை, கில்யஸ்களை, லக்ஷ்மண் கதிர்காமர்களை, சின்ன பாலாக்களை நான் எப்படி மறக்கமுடியும்?
-0-0-0-0-0-0-0-
பலப்பல வருடங்களுக்கு முன், 1980களின் நடுவில் நான் ஒரு ‘இளம்கன்று’ கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் – படிப்பறிவு மட்டும் ஓரளவு பெற்று உலக அனுபவங்கள் அவ்வளவாகப் பெற வாய்க்காத, பிரமைகளாலான இளம் பிராயத்தில் – மார்க்ஸிய சிந்தனைகளால், புரட்சிகர கருத்தாக்கங்களால், ஒட்டுமொத்த மானுடவிடுதலைப் பகற்கனவுகளால் ஆட்கொள்ளப்பட்டு இருந்த நாட்களில் – இவருடன் ஓரிரு முறை பேசியிருப்பவன் (=அதாவது,  அவருடைய சிறு நண்பர்குழாமுடன் அவர் பேசுவதைச் சிலமுறை, பெரும்பாலும் ஒரு ஓரமாக நின்றுகொண்டு கேட்டிருப்பவன்) என்கிற முறையிலும், சுமார் 15 வருடம் போலவாவது நேரடியாகவோ, சிலபல அறிமுகங்கள் மூலமாகவோ சின்னபாலாவின் செயல்பாடுகளை அறிந்துள்ளவன் என்கிற முறையிலும், நான் தயங்காமல் சொல்வேன்:
சின்னபாலா போன்ற பல மனிதர்கள், அந்தத் தறுதலைப் புலி பிரபாகரனை விட – படிப்பறிவும், மார்க்ஸீய சித்தாந்தப் பயிற்சியும், தலைமை தாங்கும் பண்பும், நேர்மையும், ராஜரீக அறிவும், தன்முனைப்பும்,  விசாலமான மனமும், மக்களின் மீது கரிசனமும், அடிப்படை மானுட விழுமியங்களின் மீது மதிப்பும் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் பிரபாகர கூலிப்படையினர்களால் அழித்தொழிக்கப்பட்டார்கள்!
 சரி. சின்னபாலாவிடமும்  சிலபல பிரச்சினைகள் இருந்தன: இதையெழுதும் எனக்கு –  1) முழுமுதலாக, நான் ஒரு இந்தியன் என்கிற முறையிலும், 2) ஈரோஸ் அமைப்பின், அபுஜிஹாத் எனும் கொலைவெறி பாலஸ்தீனிய இயக்கச் சார்பினாலும், 3) பிரபாகரன்-உமா மஹேஸ்வரன் போன்ற உதிரிகளுக்கு ஈரோஸ் கொடுத்த பயிற்சியாலும் 4) அவரால் அந்தசமயத்தில் சரியாக எனக்கு விவரிக்கமுடியாத / வெளிக்கொணரமுடியாத உள்ளுறை இந்திய எதிர்ப்புக்கான காரணங்களாலும், மிதவாதப் போக்குகளை மதிக்காத தன்மையாலும் — அவர் சார்ந்திருந்த இயக்கத்தின்மீது விமர்சனம் இருந்தது;   நான் அவதானித்தபடி, அவருடைய இயக்கப் பிறழ்வுகளால்  எழும்பியவை அந்தப் பிரச்சினைகள்!
…இருந்தாலும் – அவரிடம் சர்வநிச்சயமாக  இல்லாமல் இருந்தது – கொலைவெறியும், துப்பாக்கிமுதல்வாதமும், அற்பத்தனமும்; அதனால்தான் பிரபாகரன்களால் கொலை செய்யப்பட்டார்!
இம்மாதிரி ஒரு உரையாடலில், அவர் கிட்டு, திலீபன், பிரபாகரன் போன்றவர்களின் சிலபல செயல்பாடுகளைப் பற்றி – கிண்டலாக அல்ல, ஒரு விரக்தியடைந்த விமர்சன மனப்பான்மையுடன், சன்னமான குரலில், உணர்ச்சிவசப்படாமல் மிகத் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
இந்த கிட்டு (இவர்தான் பிரபாகரன் சார்பாக, பிற இயக்க இளைஞர்களை, பல அப்பாவிக் குழந்தைகளை இரக்கமில்லாமல் கொன்றவர்!  ஊக்க போனஸாக, பிரபாகரனுக்குப் போட்டியாக இருந்த விடுதலைப் புலிகளையுமேகூட ஒழித்தவர்!), திலீபன் (இந்த அற்ப விடலை இளைஞர்தான் பிற்காலத்தில், உண்ணாவிரத பாவ்லா செய்து, வேறுவழியில்லாமல்போய் புலி()!களால் அச்சுறுத்தப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்டு – நாடகம் நிஜமாக மாறி, பலிகடாவாகச் செத்தவர்!) போன்ற புலிக்குஞ்சாமணி மாக்களின் – 1) தங்கள் சொந்த ஈழத்தமிழ் மக்கள் பற்றிய மட்டரகமான கருத்துகள் பற்றி, 2) எப்படி ஈழத் தமிழர்களை  ஏமாற்றவேண்டும் என்பதை மட்டுமே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தது/பேசியது பற்றி, 3) புலிகள் ஈழமக்களை எலிகளுக்குச் சமமாக மட்டுமே மதித்தது பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்…
பிரபாகரனின் ஹிட்லர் வழிபாட்டையும், ஜெர்மனியின் நாட்ஸிகள் வளர்ந்தவிதத்திலேயே விடுதலைப்புலிகளும் வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனும் பிரபாகர ஹிட்லரியத்தையும், நாட்ஸி (=’நாஜி’) வழிமுறைகளை வரைமுறையில்லாமல் காப்பியடித்தலையும் – அந்த பிரபாகர லும்பன், நாட்ஸி கைவிரைப்பு வெறி ஸல்யூட் முறையைக்கூட வலுக்கட்டாயமாக, தன் இயக்கத்தில் செயல்படுத்தியமை பற்றியும்…
இவை அனைத்தைப் பற்றியும் – வெறுப்பில்லாமல், கொஞ்சம் தளர்வடைந்த சிரிப்புடன் மட்டும்  – மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார்… (குறிப்பு:லும்பன், ஹிட்லரியம், புலிக்குஞ்சாமணிகள் போன்றவையெல்லாம் என் வார்த்தைகள் – அவர் அவற்றை உபயோகிக்கவில்லை!)
…ஆனால் – ‘விடுதலை’ இயக்கங்களின் கயமைத் தலைமைகள் மீது வெறும் விமர்சனம் வைப்பதை மட்டும் செய்யவில்லை அவர். பரந்துபட்ட மக்களை அரவணைத்தல் – அவர்களது ஆசைகளை, தேவைகளை அமைப்பின் மூலமாக ஒருங்கிணைத்து மேலெழும்பிச் செல்வது எப்படி – இனமைய வாதங்களின் (ஈழத்தமிழ் முதல்வாதம் உட்பட) அடிப்படை ஃபாஸ்ஷிஸ்ம் – அதனைக் கல்வி+களப்பணி மூலம் எதிர்கொள்வது எப்படி எனப் பலப்பல விஷயங்களையும் தொட்டுக்கொண்டிருந்தார் என நினைவு. (இதைப் பற்றியெல்லாம் பின்னொரு நாள், சாவகாசமிருந்தால் எழுதுகிறேன்)
-0-0-0-0-0-0-
இப்போது சுருக்கமாக, ‘சின்ன பாலா’ பற்றிய என் விவரணைகளை, அவர் சார்ந்திருந்த ஈரோஸ், பின்னர் ஈபிடிபி போன்ற பின்புலங்களினூடே கொடுக்கிறேன்:
  • யாழ்ப்பாணத்தில் 1957ல் பிறந்த அவர், ஒரு பிராம்மண-ஆசிரியக் குடும்பத்தைச் சார்ந்தவர்.  அவருடைய 15 வயதிலிருந்தே அரசியல் சமுதாய ஈடுபாடுகளில் முழுமூச்சாக முனைந்தவர்.
  • அவரோ, அவர் குடும்பத்தினரோ யாழ்ப்பாண மேட்டிமையையோ, ஜாதி-மத ரீதியான அற்பத்தனத்தையோ உயர்த்திப் பிடிக்காதவர்கள். அவர்கள் மூட நம்பிக்கைகளுக்கும், தீண்டாமை உள்ளிட்ட அயோக்கியக் கொடுமைகளுக்கும், பழமைமுதல்வாதங்களுக்கும், பத்தாம்பசலித்தனங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டவர்கள். பெண்ணுரிமைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் போராடியவர்கள்.  பலப்பல சமூகங்களைச் சார்ந்த மக்களை அரவணைத்தவர்கள்.
  • இப்படி ஆயிரம் கல்யாணகுணங்கள் இருந்தாலும் பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல், கருமமே கண்ணாக இருந்திருக்கிறார்கள். பிரபாகரன்களைப் போல சொந்தத் தமிழ்க் குழந்தைகளைக் கூடக் கயமையுடன் கொன்றுகொண்டு வெறியுடன் எக்காளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருப்பவர்களில்லை அவர்கள்!
  • 1975ல் (அப்போது சின்னபாலாவுக்கு 18 வயதுதான்!) மற்ற சகபயணிகளுடன்  சேர்ந்து ஈரோஸ் (ஈழ மாணவர்களின் புரட்சிகர அமைப்பு – Eelam Revolutionary Organization of Students) எனும் அமைப்பை உருவாக்கி அதன் தொடங்கிகளின் குழுவில் முழுமூச்சாக வேலைசெய்தார்.
  • சின்னபாலா போன்ற அழகான ஆசாமிகள் இருந்ததால்தான் — அனைத்து ஆயுதமேந்தி ‘ஈழ’ இயக்கங்களிலும் –  இந்த ஈரோஸ் மட்டுமேதான், சிந்தாந்த ரீதியில் நெடுநாள் நோக்கில் மக்கள் முன்னேற்றத்தைப் பற்றிய, விடுதலை பற்றிய கவலைகளுடன், செயல் திட்டங்களுடன் காத்திரமாக மக்களைத் திரட்டுவதில்/ஒருங்கிணைப்பதில் ஈடுபட்ட ஒன்று.
  • இதில் பலப்பல படிப்பாளிகள் இருந்தார்கள்; ஆகவே ஈரோஸினால் பல முன்னோடி முனைவுகள் ஆத்மார்த்தமாக முன்னெடுக்கப்பட்டன. ஒரு எடுத்துக்காட்டாக – இந்த ஈரோஸ் தான் ஸ்ரீலங்கா முஸ்லீம்களின் நிலையைப் புரிந்துகொண்டு அவர்கள் மீட்சிக்காகவும் செயல்திட்டங்களை வைத்திருந்தது. அவர்களை ஒருங்கிணைத்து தம் அமைப்பில் ஈடுபடுத்தியது.
  • 1975-77 வாக்கில் அபுஜிஹாத் (“ஜிஹாதின் குழந்தை” எனும் பாலஸ்தீனிய பயங்கரமுதல்வாத அமைப்பு) அரைகுறைகளுடன் ஈரோஸ் தொடர்பேற்படுத்திக்க்கொண்டு தம்முடைய சில தொண்டர்களை அங்கே பயிற்சிக்காக அனுப்பியது. ஸ்ரீலங்காவிலேயே பயிற்சி முகாம்களை நடத்திய ஈரோஸ்தான் – அந்த அயோக்கியப் பிரபாகரனுக்குமேகூட அடிப்படை ராணுவப் பயிற்சியை அளித்தது. டெலொ, ப்ளோட், ஈபிஆர் எல் எஃப் உட்பட பல அமைப்புகள் சார்ந்த தொண்டர்களும் ஈரோஸ் முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களே!  (நான் அறிந்தவரை சின்னபாலா இந்த பாலஸ்தீனிய பயிற்சிகளுக்குச் செல்லவில்லை; ஆனால், தராதரம் பார்க்காமல் கண்டகழுதைகளுக்கும் ஆயுதப் பயிற்சியளித்த ஈரோஸ் மீது எனக்கு மாளாப் பிரச்சினை!)
  • 1983-85 வாக்கில் சின்னபாலாவும் இந்திய ராணுவத்தினால், இந்தியாவில் கொடுக்கப்பட்ட ஆயுதப் பயிற்சிகளில் பங்கேற்றார். பிரபாகர உதிரி கும்பல்களும் இம்மாதிரி பயிற்சி பெற்றன. (இந்த கேடுகெட்ட விஷயத்தை இந்தியா செய்திருக்கவேகூடாது என்பது என் கருத்து; இதற்காக, ஒரு இந்தியன் என்கிற முறையில், நான் வெட்கித் தலைகுனிகிறேன். இந்த வரலாற்றுத் தவறினால் – இந்தியா வளர்த்த பிரபாகரக் கடாக்கள் இந்திய மாரிலேயே பாய்ந்து பலப்பல இந்தியக் குடிமகன்களின் உயிர்களை மாய்த்தது (ராஜீவ்காந்தி உட்பட! ஆயிரத்துக்கும் மேலான இந்திய உயிர்கள் உட்பட!!) நம் மகாமகோ வரலாறு அல்லவா!)
  • ஜூலை-ஆகஸ்ட் 1985 வாக்கில் – இந்திய அரசின் முனைப்பினால் நடந்த திம்பு(புடான்) பேச்சுவார்த்தைகளில் ஈரோஸ் சார்பாக, சின்னபாலாவும் கலந்துகொண்டார். (பிரபாகரன், இந்தப் பேச்சுவார்த்தையின்போது கூட அழிச்சாட்டியம் செய்து, ஒரு சிறுபிள்ளையைப்போல முதிர்ச்சியற்று விடலைத்தனமாக நடந்துகொண்டது, ஒத்திசைவைப் படிக்கும் சில வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்)
  • ஆனால், ஈரோஸ் ஒரு ஆயுதம்தரித்த குழுவானாலும், தீவிர துப்பாக்கிமுதல்வாதத்தை முன்னெடுக்கவில்லை. பின்னர் இந்திய அமைதிப்படை, உட்போர்கள், அழித்தொழித்தல்கள் என நடந்து பிரபாகரன்கள் மேலேழும்பி வரும்போது 1990ல் ஈரோஸில் ஒரு பெரிய பிரிவு பாலகுமார் தலைமையில் எல்டிடிஇ கும்பலுடன் ஜோதியில் கலந்தது.
  • இதனுடன் எல்டிடிஇ-இல் ஐக்கியமாகி அதன் செய்திப்பத்திரிகை குழுவில் சேர்ந்தார், சின்னபாலா; ஆனால் – தறுதலைப் புலிகளின் அயோக்கியத் தன்மையை, அதன் தலைமையின் கயமையை, மக்களிம் முன்னேற்றத்துக்கு எதிரான ஃபாஸ்ஷிஸ்ட் போக்கை நன்கு அறிந்த சின்னபாலா முழுவதுமாக அந்த ஜோதியில் கலக்கவில்லை. இருந்தாலும்,  தறுதலைகளின் பிடியில் இருந்து அவர் தப்பித்து வெளியேற 1995 போல ஆகிவிட்டது.
  • பின்னர் அவர் ப்ளோட் அமைப்பில் சில நாள் இருந்து, பின்னர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி அமைப்பில் சேர்ந்து சில தேர்தல்களிலும் வென்றார்; . பின்னர் அதன் செய்தித் தொடர்பாளராக, ஊடகக் காரியதரிசியாகப் பலவருடம் இருந்தார். ஜனநாயகத்துக்காகவும், மக்களின் மேன்மைக்காகவும் ஆகவே எல்டிடிஇ கும்பலுக்கு எதிராகவும் குரலெழுப்புதலையும், முன்னெடுப்பகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்… (இதனைப் பற்றி, பலப்பல விவரங்கள் இருக்கின்றன; யாராவது, இது தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதக் கூடுமானால், என் குறிப்புகளைத் தரமுடியும்)
  • எனக்குத் தெரிந்து, சின்னபாலா ஆயுதத்தை ஒருபோதும் உபயோகித்தவரில்லை. அவரது எழுத்துகள்தான், முற்போக்குச் சிந்தனைகள்தாம், மேலும் முக்கியமாக, அவரது களச் செயல்பாடுகள்தாம் அவருடைய ஆயுதம்.
  • ஆகவே போய்ச் சேர்ந்தார். அதாவது தறுதலைப் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டார்!
சுபம்.
சின்னபாலா – மேலதிகமாக,  ஒரு கவிஞரும், கதாசிரியரும், பத்திரிகையாசிரியரும் கூட! இவர் எழுதிய சில கட்டுரைகளையும் ஒரு புத்தகத்தையும் (திம்பு முதல் டோக்கியோ வரை: புலிகளின் பேச்சுவார்த்தைகளும் பயன்பெறாத தமிழ்மக்களும்) படித்திருக்கிறேன். இவருடைய கவிதைகள் சுகமில்லை; சிறுகதைகள் பரவாயில்லை. ஆனால் ஆத்மார்த்தமான விழைவுகளும் அவதானிப்புகளும், நுணுக்கமான பார்வைகளும் கொண்ட அவருடைய கட்டுரைகள் மிகமிகமுக்கியமானவை.
சின்னபாலாவின் மனைவியும் அவருடைய மூன்று குழந்தைகளும் கஷ்டஜீவனத்தில்தான் இருந்தார்கள் எனக் கேள்வி.  இப்போது, அக்குழந்தைகள் வளர்ந்திருக்கவேண்டும்…
-0-0-0-0-0-0-
நான் இப்பதிவின் ஆரம்பத்தில் எழுதிய பிரபாகரன்-சின்னபாலா பொருத்திப்பார்த்தலுக்கு, விரித்த சித்திரத்துக்கு ஒருமாதிரியான ஒத்திசைவுடன் –  என் மதிப்புக்குரிய பத்திரிகையாளரும் ஸ்ரீலங்காவிலிருந்து தேசம்மாறி கனடாவில் வசித்துக்கொண்டிருப்பவருமான டேவிட் ப்யூவல் சபாபதி ‘டிபிஎஸ்’ ஜெயராஜ் அவர்களும்  தம் கருத்தைத் தெரிவிக்கிறார்.
"Sinna Bala has been interlinked with the evolution and growth of the Tamil militant nationalist movement from its pioneering days. He has a history that is equal if not more to that of LTTE Leader Velupillai Pirapaharan. Sinna Bala has to a very great extent personified the various stages and phases of the course of Tamil political struggle."
“Sinna Bala has been interlinked with the evolution and growth of the Tamil militant nationalist movement from its pioneering days. He has a history that is equal if not more to that of LTTE Leader Velupillai Pirapaharan. Sinna Bala has to a very great extent personified the various stages and phases of the course of Tamil political struggle.”
அதாவது, என்னுடைய மொழி’பெயர்த்தலில்’:
‘தமிழ் ஈழ’ தேசிய தீவிரவாத இயக்கங்களில் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் – அவற்றின் ஆரம்ப நாட்களிலிருந்தே தொடர்புள்ளவராக இருந்திருக்கிறார், சின்ன பாலா; அவருடைய வரலாறு என்பதுகுறைந்தபட்சம் பிரபாகரனின் வரலாறுக்குச் சமமானது, அல்லது மேலானது. சின்னபாலா, பலவிதங்களில் – தமிழ் அரசியல் முனைவுகளின் பல படிகளை, போக்குகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்.

 https://othisaivu.wordpress.com/2015/08/16/post-539/


பயங்கரவாதி பிரபாகரனால் கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்!!!


சர்வதேச பெண்கள் தினத்தில் ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கி ன்றன.அவர்களில் ராஜனி திரணகம, செல்வி,சிவரமணி,சரோஜினி யோகேஸ்வரன்,மகேஸ்வரி வேலாயுதம் ரேலங்கி செல்வராஜா..... ...... என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்க ளாயுள்ளோம்.இந்த இழப்புகள் இயற் கையில் வந்தவை யல்ல.தவிர்த்திருக்க முடியாதவையுமல்ல. ஆனால் கடந்த காலத்தில் இலங்கையில் கோலோச்சிய வன்முறை சூழலும் அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டு கலாசாரமுமே நாம் இழந்துபோன இந்த ஆளுமைகளை தீர்த்து கட்டியிருந்தது. இன்று பெண்களை பாதுகாப்போம், பெண்களை மீட்டெடுப்போம், பெண் களுக்கு சுதந்திரம் வழங்குவோம் என்று நாம் ஒவ்வொருவரும் கோசங்களை உச்சரித்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் எம்மால் பல பெண் ஆளுமைகளின் இருப்புகளை கடந்த காலங்களில் காப்பாற்ற முடியவில்லை.எமது சமூகத்தை வழிநடத்தும் மிகப்பெரும் திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த பெண்களை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.அதன் பிரதிபலனானாகவே எமது பெண்சமூகம் இன்று மீளமுடியாத அகலபாதாலத்துக்கு சென்று கொண் டிருக்கிறது எனலாம்.

ராஜினி திரணகம

இலங்கையில் எழுத்துக்காக கொல்லப்பட்ட முதல் பெண்.யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் உடல்கூற்றியல் விரிவுரையாளராக கடமை´யாற்றியவர். சமூகம் சார் சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமென்பதில் தீராது அக்கறையுடன் செயல்பட்டவர். அவர் பற்றி அவரது மாணவனொருவர் பின்வருமாறு எழுதுகிறார்.

"அவர் வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் மாணவர்களை மிகத் திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள் நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார்".

தமிழீழ விடுதலைபோராட்டத்தின் தோல்வியை முன்னறிவித்த "முறிந்த பனை" என்னும் வரலாற்றுதொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றிய வரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனின் கரங்களால் 1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று யாழ் பல்கலைகழக வளாகத்தில் 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து வெளியே வரும் போது சுட்டுகொல்லபட்டார்.அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான். கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட பொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்த வர்கள் யார் என்று நன்றாக தெரியும். ஆனால் அனைவரும் மௌனம் காத்தனர்.

கவிஞை செல்வி

பெண்ணியவாதியான இவர் யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் நாடகமும் அரங்கியலும் எனும் துறையின் இறுதியாண்டு மாணவி.தோழி இதழின் ஆசிரியராக இயங்கியவர்.தனது கல்வி செயற்பாடுகளுக்கு அப்பால் சமூகம் சார்ந்து தீராது உழைத்தவர். யாழ்ப்பாண பெண்கள் ஆய்வுவட்டம், பூரணி பெண்கள் நிலையம் என்று பலவிதத்திலும் பெண்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டவர். .1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் புலிகளால் கடத்தப்பட்ட இவரை விடுவிக்க கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பு பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது ((Poets Essayists and Novelists) PENஅமைப்பினால் செல்விக்கு வழங்கப்பட்டது. . இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத் திற்காகவும் எழுத்துத ¢தளத்திலும் கலைத்தளத்திலும் படைப்புக் களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்ப டுவதாகும். செல்வி ஈழத்தின் நெருக்க டியான போராட்ட வழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ்விருது வழங்க ப்பட்டது. இவரை புலிகள் இறுதிவரை விடுதலை செய்யவேயில்லை.

சரோஜினி யோகேஸ்வரன்

1997 ஆம் ஆண்டில் இவர் யாழ்ப்பாண நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரோஜினி இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனின் மனைவியும் ஆவார். திருமதி யோகேஸ்வரன் 1998 மே 17 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து புலிகளால் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மரணமானார். தமிழீழ விடுதலைப் புலிகள் இவரது கணவர் வெ. யோகேசுவரனை1987 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்து சுட்டுக் கொன்றனர்.இன்று யாழ்மாநகர சபையும் வட மாகாண சபையும் ஒரு ஜனநாயக சூழலுக்குள் இயங்குவதற்கு உரமாக தன்னுயிரை தந்தவர்.








சிவரமணி


பிரபாகரனால்  நிர்பந்த கொலை செய்யப்பட்ட சிவரமணி!!
விடுதலைப் போராட்ட நிழலாக “புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரே” என்று எழுதிய நெருப்பு பற்றி, இளைஞர்களின் விடுதலை எழுச்சியின் பிண்ணனியில் “என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி, ஒரேயொரு கைக்குண்டு, என் எதிரிக்கெதிராய்ப் போரைப் பிரகடனம் செய்ய என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி ஒரேயொரு கைக்குண்டு எனினும் நான் தளரவில்லை......” என்று வீரமா உருவாகிய தமிழர் கலை இலக்கிய மலர்ச்சியின் எழுச்சியில் உருவாக்கிய ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் சிவரமணி,
சிவரமணி எழுதிய எல்லாக் கவிதைகளையும்,சேர்த்து வைத்து இருந்த புத்தங்கங்கள் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு நெருப்பு பத்த வைத்துப் போட்டு ,நித்திரைக் குளிசையை அள்ளிப்போட்டு "....மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள் என் பாதங்களுக்கிடையில் மூச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது...." என்று விரக்தியாக எழுதிய சிவரமணி இருவத்தி மூன்று வயதில் பிரபாவின்த  கொலை  அச்சுறுத்துலுக்கு  பயந்து  தற்கொலை செய்து இறந்து பல  வருடங்களாகிவிட்டன.
அறிவுவுள்ள  பிண்ணனியில் இருந்த ஒரு குடும்பத்தில்ப் பிறந்தவா. பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ,அப்பா சின்ன வயசில் இறந்துபோக ,அம்மாவுடனும் ஒரே ஒரு சிறிய சகோதரியுடனும் வாழ்ந்தவா. கொஞ்சம் எல்லாரோடும் சேராத,அரசாங்க உத்தியோகம் செய்த வசதியான குடும்பம், சிவரமணி யாருடனும் அதிகம் பழகாத ஒரு அப்பாவிப் பெண் போன்ற தோற்றம் உடைய, மிகவும் உயரம் குறைந்த, யாரையும் அதிகம் நிமிர்ந்தே பார்க்காத அந்தப் பெண்ணின் உள்ளே ஒரு எரிமலை இருந்து, அது கவிதை வடிவில் எப்பவுமே வெடித்து வெளியே வர ,சிவரமணி தற்கொலை செய்த பின் பல விமர்சனங்கள்,நிழலான கருத்துக்கள் இலங்கையிலும் புலம் பெயர்நாடுகளிலும் வெளிவந்தன.
மர்மமான அந்த நிகழ்வின் சில விசியங்கள் இன்னும் பலருக்கு தெரிய வரவேயில்லை,காரணம் சிவரமணியே ஒரு மர்மமான கவிதாயினி.மேடையில் ஏறி கவிதை வாசித்தோ,அல்லது அப்போது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த முக்கிய இலக்கிய சஞ்சிகைகளே அவரின் ஆக்கம் வெளிவரவில்லை எண்டு நினைக்கிறன்,அப்புறம் எப்படி சிவரமணி கவிதை உலகில் இவளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பதுக்குக் காரணம், சிவரமணி கவிதை எழுதிய விதம்,அதன் கவிதை மொழியின் வீரியம், அது ஏட்படுதிய ஜோசிக்க வைக்கும் சலசலப்பு எல்லாத் தரப்பையும் நீதி கேட்ட நியாயங்கள்.
மிகவும் சிறப்பாக ஆங்கில அறிவுள்ள சிவரமணி யாழ் பல் கலைகழகத்தில் படித்து,அங்கேயே பின்னர் ஆங்கில இன்டலெக்சுவல் இலக்கிய,அரசியல் புத்தகம், கட்டுரைகளை மொழி பெயர்தவா, இன்னுமொரு கம்பஸ் கவிதாயினி செல்வி, போன்றவர்களுடன் வேலை செய்தவா. சிவரமணி ஆரம்பத்தில் ...... என்ற அமைப்பின் அரசியல் விசுவாசியா இருந்து விடுதலை எழுச்சி கவிதைகளை விடவும் பெண்களின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் எழுதியவா, மனித உரிமை அமைப்புக்களுடன் நிழலாக இயங்கியவா,நீங்களே சொல்லுங்க பார்ப்பம், இவளவும் போதாதா ஒரு பெண்னை இயல்பாக இயங்க விடாமல் செய்வதுக்கு.
சொல்லபோனால் அவாவின் எழுதும் முறை அப்போது எழுதிக்கொண்டு இருந்த கவிஞ்சர்களின் ஸ்டைலை விடவித்தியாசமானது. முக்கியமா அவா ஆங்கிலக் கவிதைகள் மொழி பெயர்ததால் சில்வியா பிளாத் இன் " கொன்பெஸ்சனல் " ஸ்டைலில்,அலன் ஜின்ச் பெர்கின் கோப வரிகளின் பாதிப்பு நிறையவே இருக்கு அவாவின் கவிதைகளில். எரிக்கா யங் எழுதிய கவிதைகள் போல சில தரமான கவிதைகள் எளிமையான தமிழில் எழுதிய சிவரமணி கடைசியில் சில்வியா பிளாத் போலவே தற்கொலை செய்ததுக்கு நிறைய மன அழுத்தக் காரணங்கள் அவாவின் வீட்டிலை அதிகமாயும் வீட்டுக்க்கு வெளியே நாட்டிலை கொஞ்சமும் இருந்தது..
ஈழ விடுதலைப் போராட்டதில் எல்லா இளஞர்,யுவதிகள் ஆர்வாமாய் இணைந்ததை " ..தேசத்தின் அறிவாளிகள் தெருக்களில் துப்பாக்கிகளுடன்...." என்று இயல்பாக எழுதிய சிவரமணி அவர்களே,ஜனநாஜகப் பாதையில் இருந்து கொஞ்சம் குளறுபடியாக பாதை மாறிய போது , சிவரமணியின் குரல் கொஞ்சம் காட்டமாக "....நிராகரிக்கப்பட முடியாதவள் நான்..... " என்று எழுதத் தொடங்கி ,துணிவோடு “....என்னிடம் ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை...” என்று எழுதி இன்னும் குழப்பமாக அந்த நாட்களில் இயங்கிய ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளின் குறுகிய மனப்பான்மை,போட்டி,பொறமை,எல்லாத்தையும் “வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்பட்டுள்ளன.....”என்று எழுதிய பொழுதே சிவரமணியின் சிந்தனை வீச்சு கவனிக்கப்படத் தொடங்கி இருக்கலாம், அது அவாவுக்கும் தெரிந்து இருக்கலாம்.
எண்பதுகளின் புதுக் கவிதைப் போக்கில் கவிதை மொழியில் நிறைய புதுமை செய்த ஒரு அடக்கமான பெண் என்பதால் சிவரமணி ஈழத்துக் கவிதை வரலாற்றில், புரட்சிகர காலகட்டத்தின் மிக முக்கியமான கவிதாயினி என்பதுடன் இன்றைக்கு யாழ்பாணத்தில் இருந்து எழுதும் பெண் கவிதாயினிகளின் கவிதைகளில் சிவரமணி பற்ற வைத்த “..கூனல் விழுந்த எம்பொழுதுகளை நிமிர்த்தத்தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை..” போன்ற பொறியைப் பார்க்கலாம்.
தற்கொலை ஒரு தற்காலிக பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு எண்டு சொல்லும் இந்த உலகத்தில், ஒரு படைப்பாளி வாழும் சுழல் எவளவு மன உளைச்சலை தனிப்படக் கொடுக்கும் என்பதுக்கு உதாரனமான சிவரமணியின் கவிதைகளைத் தொகுத்து கனடாவில் "விழிப்பு " பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ளன, பேராசிரியை சித்திரலேகா மவுனகுரு சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளா . மின்னியல் வெப் ஊடறுவின் நூலகப்பகுதியிலும் சில கவிதைகள் வாசிக்க முடியும்...
யாழ்பாணத்தில் பிறந்த சிவரமணி பற்றியோ,அவர் கவிதைகள் பற்றியோ யாழ்பாணத்தில் இருந்து எழுதும் எழுத்து ஜாம்பவான்கள் அதிகம் பேர் ஒண்டுமே எழுதவில்லை. தமிழ் நாட்டில் இருந்து எழுதும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஒரு அருமையான கட்டுரை "....என்னையும் நிர்வாணமாக்கும் என்கிற நம்பிக்கைக் கீற்றில் கணங்களைக் கொழுத்தி என்னைப் பட்டைதீட்டிக் கொள்கிறேன்.." என்ற வரிகள் வரும் கவிதையையும்,வேறு சில கவிதைகளையும் சிலாகித்து, கமலா தாஸ் போன்ற இந்திய உப கண்டப் பெண்ணியல் கவிதாயினிகளை விடவும் மிகவும் சிறந்த ஒரு கவிதாயினி சிவரமணி என்று எழுதி இருந்தார்,அது நிறைய பேர் தமிழ் நாட்டில் சிவரமணி யார் எண்டு தேடி வாசிக்க வைத்தது.
இலங்கை ராணுவத்தின் அட்டகாசம் ,சகோதர இயக்கப் படு கொலைக் குளறுபடிகள்  , வரலாற்று நிகழ்வுகளின் நடுவே, மொழி இழந்த அப்பாவி மக்கள்,விதவைப் பெண்கள்,இயக்கப் போராளிகள், போராட்டம், ஜனநாஜகம், இவற்றின் நொந்து போன குரலின் குரல்வளையாக மாறிய சிவரமணியின் கவிதை வரிகள் ஒரு காலகட்டத்தின் தவிர்க்க முடியாத தரவாகப் பதிவாகி “எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்......” என்று கையறுநிலை பற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றவர் ,சிவரமணி .
சிவரமணியின் மரண வீட்டில், அவாவின் யாழ் பல்கலைக்கழக நண்பர்கள் ஒரே ஒரு கவிதை எழுதி ஒரு துண்டுப் பிரசுரம் போலக் கொடுத்தார்கள்,அந்தக் கவிதையின் கடைசி வரி இப்படி முடியும் " ,,,எல்லாம் முடிய முன்னர் முற்றுப்புள்ளியை ஏனம்மா முன்னுக்கு வைத்தாய் ...." எண்டு. ஏனோ தெரியவில்லை எங்கள் அன்புக்கு உரிய சிவரமணி தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்ட பின்னும் அந்த வரிகளை இன்னும் மறக்க முடியாமல், அதன் அர்த்தம் தானாகவே சொல்லும் வரிகளின் வேதனையை விளங்கிய எல்லா கவிதை ரசிகர்களுடனும் நானும் சேர்ந்து ,மனதில் நினைவு வைத்துக் கொண்டு , இதயத்தில்க் காவிக்கொண்டு தெரிகிறேன்.
...........சில கவிதை வரிகளையும் , அதை எழுதியவர்களையும் அவளவு சுலபமாக, இதயத்தை விட்டு இறக்கி வைக்கவே முடியாது.......இதுதான் வாழ்க்கை......

எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.

4. வையகத்தை வெற்றி கொள்ள

என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.
ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.
எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.
வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.
சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.

மகேஸ்வரி வேலாயுதம்

1983 ன் பின்னர் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஓடிச்சென்ற தமிழ் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக் கமாக நின்று உதவிகரம் நீட்டியவர். அகதிகளின் வாழ்வில் ஓடியோடி பங்கெடுத்து அயராது உழைத்தவர். நமது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஸ்ரீலங்கா அரசின் விசுவாசமான ஊழியனாய் உச்சநீதிமன்றில் இருந்துகொண்டு இருந்து எமது இளைஞர்களுக்கு ஐந்துவருடம் பத்து வருடம் என்று சிறைவாச சாபம் கொண்டி ருந்த வேளைகளில் இலங்கை சிறைகளில் வாடிய ஆயிர கணக்கான தமிழ் அரசியல் கைதிகளுக்கு இலவச வழக்காடி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மனித உரிமை சட்டத்தரணியான 53வயதுடைய மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் சுகயீனமுற்றுள்ள தனது தாயாரான ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதம் அவர்களை பார்ப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த சமயம் 2008 மே மாதம் சுட்டு கொலை செய்யப்பட்டார்

ரேலங்கி செல்வராஜா

ரேலங்கி செல்வராஜா என்ற ஈழத்தமிழச்சியையும் அவர் கணவர் சின்னத்துரையையும் சுட்டுக்கொன்ற மலையாளி பிரபாகரனும்,விடுதலைப்புலிகளும்!!!
விடுதலைப்புலிகளின் கொலைகளை பற்றிய உண்மைகளை தைரியமாக விமர்சித்ததால் பிரபாகரனால், ரேலங்கி மற்றும் அவரது கணவர் சின்னத்துரை செல்வராசாவுக்கும் மரண தண்டனையை பரிசாக அளித்தான்.
இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆவார். தொடக்க நாட்களில் திரை ப்பட நடிகையாகவும் இருந்த இவர் தனது கணவருடன் சேர்த்து ஆகஸ்ட் 12 , 2005 கொழும்பில் வைத்து புலிக ளால் சுட்டுக் கொல்லப்பட்டார் இவர்களின் கொலையின்போது ஒரு வயதும் அடையாத அவர்களது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.

இப்படி இன்னும் பலர் துரோகிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொன்று வீசப்பட்டனர். போர் தின்ற மாந்தர்களான இந்த மாபெரும் பெண் ஆளுமைகளை இந்த சர்வதேச பெண்கள் தினபொழுதுகளில் நினைவுகூருவோம். 

நன்றி - தேனீ

Sunday, 26 June 2016

ராஜனி திராணகம படுகொலை தொடர்பாக வெளிவராத உண்மைகள்!



(இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை கீழே)
என் சத்தியப்பதிவு 21 - 09 - 2005

எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!

1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.


அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது
Free Doom
& Free Dump
ist our Freedom...?

இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.

அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.
எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.

இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.

மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.

இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.

மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.

சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.

எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.

1989ம் ஆண்டில் யாழ். மருத்துவபீட மாணவன்

பிரபாகரன் தலையில் கோடரியால் கொத்தியது யார்..?

polpot3
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானே படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கின்றார் என அரசியல் அவதானிகளில் ஒரு சாரார் சந்தேகிக்கின்றனர்.
அரசியல் அவதானிகளில் ஒருவரான சித்திரெஜினா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்ற கட்டுரை, இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டு இருக்கின்ற ஊகங்கள் இது போன்ற சந்தேகங்களை நியாயப்படுத்துவனவாகவும், வலுப்படுத்துவனவாகவும் உள்ளன.
கட்டுரையின் முதலாம் பாகத்தை உங்கள் வாசிப்புக்கு தருகின்றோம்.
“ சுமார் 38 வருடங்களுக்கு முன்.. பங்காளதேஷின் விடுதலை தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுடன் அவரது 11 வயது பாலகன் ஷேக் றூசல் கொல்லப்பட்டது போலவே.. சுமார் 4 வருடங்களுக்கு முன்.. தமிழீழ விடுதலை தலைவர் பிரபாகரனுடன் அவரது 12 வயது பாலகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டிருக்கிறான்.. அன்றும் இன்றும் இந்த‌ படுகொலைகள் நடந்த போது ஒன்றுமறியாத இந்த பச்சைப் பாலகர்களும் ஈவிரமிக்கமில்லாமல் கொல்லப்பட்டது மனித நேயத்தின் அடிப்படையில் ஒரு பஞ்சமா பாதகச் செயல் என்பதை எவராலும் மறுக்க முடியாது..
ஆனால் தன் எதிரியை அழிக்கும்போது.. எதிர்காலத்தில் தனக்கு இந்த குடும்பத்தில் எஞ்சியிருக்கும் யாராவது ஒருவரால் ஆபத்து நேரிடும் என்பதற்காக அவர்களையும் அந்த‌ எதிரியுடன் சேர்ந்தே அழிப்பது.. இன்று நேற்றல்ல அன்றைய மன்னர் காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கொடூரமான‌ வழிமுறையாகும்.. தங்கள் எதிர்கால பாதுகாப்புக்காக‌ இப்படிப்பட்ட மனித நேயமற்ற படுகொலைகளை அன்றைய மன்னர்கள் தாராளமாகவே அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக‌ இலங்கை இந்திய மன்னர் வரலாறுகளில் பல சம்பவங்கள் பதியப்பட்டிருக்கின்றன..
பிரபாகரனின் படுகொலை விடயத்தில்.. அவரை கொலை செய்தது இலங்கை இராணுவம்தான் என்பதற்கு கண்கண்ட சாட்சிகளோ அல்லது வலுவான ஆதாரங்களோ ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது போல.. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும் இலங்கை இராணுவம்தான் கொலை செய்தது என்பதற்கும் கண்கண்ட சாட்சிகளோ அல்லது வலுவான ஆதாரங்களோ எதுவும் இல்லை..
balachandran-1
ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவரை இலங்கை இராணுவம்தான் கொலை செய்தது என்பதை இலகுவில் நிரூபித்துவிட‌ முடியாது.. அதை நிரூபிப்பதற்கு மேலும் பல வலுவான‌ ஆதாரங்கள் தேவை.. சில வேளைகளில் இந்த படுகொலைகளை பிரபாகரனுடன் கூட இருந்த‌ புலிகள்கூட செய்திருக்கக் கூடிய வாய்ப்புகளும் இருந்திருக்கின்றன‌..
இப்படிப் பார்க்கும்போது அந்த படுகொலைகளை செய்தது யார்? புலிகளா அல்லது இலங்கை இராணுவமா? என்ற சர்ச்சை உருவாகி விடுகிறது.. இவைகள் பக்கச் சார்பற்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும்…
பிரபாகரன் உயிர் வாழ்ந்த காலத்தில்.. அவருக்கு இலங்கை இராணுவம் மட்டுமே எதிரியாக இருந்திருக்க‌ வில்லை.. அவருக்கு அவர் தலைமை தாங்கியிருந்த விடுதலை புலிகள் இயக்கத்திற்குள்ளும் அவரை ஒழித்துக் கட்டி.. அந்த பதவியை பறித்துக் கொள்ள தாராளமாக‌ எதிரிகள் பலர் இரகசியமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன‌…
ஆகவே அப்படிப்பட்ட‌ புலிகளுக்குள் இயங்கிக் கொண்டிருந்த இரகசிய புலிக் குழு ஒன்றே போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனையும் பாலச்சந்திரனையும் படுகொலைகளை செய்திருக்கக் கூடிய வாய்ப்புகளும் இருந்திருக்கின்றன….
பிரபாகரன் புலிகளால் கோரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு அவர் கொலை செய்யப்பட்டிருக்கும் பாணியை வைத்து ஊகிக்க முடியும்.. போரில் கொல்லப்பட்ட மற்றைய புலி உறுப்பினர்கள்போல்.. அவர் யுத்தத்தில் ஈடுபட்டு குண்டடி பட்டு இறந்திருக்கக் கூடிய எந்த தடயங்களும் அவரது இறந்த உடலில் காணப்படவில்லை..
ஆனால் தலையில் மட்டும் கோடரி ஒன்றினால் ஆழமாக கொத்தப்பட்ட ஒரு பெருங்காயம் மட்டுமே காணப்பட்டது.. அப்படியானால் அவரை யாரோ உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து.. இப்படி அவரது தலையில் கோடரி ஒன்றினால் கொடூரமாக‌ கொத்தி கொலை செய்திருக்கலாம் என்று கருத‌ இடமிருக்கிறது.. ..
இந்த கூற்றை நீரூபிக்க‌.. ஒரு பெண் போராளியாக புலிகளுடன் வாழ்ந்த ஒரு முன்நாள் பெண்புலி எழுதியிருந்த ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு சம்பவத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.. அதற்கு முன் இந்த புத்தகத்தை எழுதியவரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அவரைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டியது இங்கு அவசியமாக இருக்கிறது…
1987 ம் ஆண்டு தனது 17 வயதில் .. இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் காலூன்றி இருந்த காலப் பகுதியில்.. விடுதலை புலிகளின் பிரச்சாரத்தில் மயங்கி.. தனது குடும்பத்தை.. கான்வென்ட் படிப்பை துறந்து.. புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டார் அந்த இளம் பெண்.. அவர்களுடன் பல வருடங்கள் பெண் போராளியாக கடமையாற்றிய காலப் பகுதியில்.. அவர்கள் கொடுமைகள் பலவற்றை நேரில் கண்டு.. அவர்களது வன்முறை தமிழீழத்திற்கு வழிகாட்டாது என்பதை உணர்ந்து.. அதிலிருந்து விலகி இந்தியாவிற்கு சென்று.. பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலேயா சென்று.. அங்கு சட்டப்படிப்பு படித்து தற்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார்..
திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர்.. புலிகளுடன் வாழ்ந்த காலங்களில் தான் நேரில் கண்ட பல காட்சிகளை.. அனுபவங்களை.. “நிரோமி டி சொய்சா” என்ற புனைபெயரில் ஒரு புத்தகமாக‌ வெளியிட்டிருக்கிறார்.. பெண் புலிகள் (Tamil Tigress) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்த புத்தகத்தில் இடம்பெறும் ஒரு சம்பவம்தான் பிரபாகரனை புலிகள் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்க காரணமாயிருக்கிறது..
இவர் புலிகளை மட்டுமே விமர்சித்தவர் அல்ல.. இவர் இலங்கை அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்தவர்.. குறிப்பாக‌ வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கள் இழைத்த குற்றங்களையும் தைரியமாக சுட்டிக் காட்டியவர்…. இவரது இந்த புனை பெயரான “நிரோமி டி சொய்சா” கூட.. ஒரு தமிழ் தாய்க்கும் சிங்கள தந்தைக்கும் பிறந்தவரான‌ ஒரு முன்னணி ஊடகவியாலாளரும் மனித உரிமைசெயற்பாட்டாளரும்..
மகன்களை இழந்த தாயார் என்ற சங்கத்தை ஆரம்பித்து மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவரான ரிசார்ட் டி சொய்சா என்ற ஊடகவியலாளர் 18 பெப்ரவர் 1990 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசாவின் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்து.. அவரது ஞாபகார்த்தமாகவே தனது பெயரையும் “நிரோமி டி சொய்சா” என்று வைத்துக் கொண்டார்..
ஆகவே இவர் எழுதியிருக்கும் பெண்புலிகள் என்ற அந்த ஆங்கில நாவல் பக்க சார்பற்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது…. எனவே இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் நம்பகத்தன்மை கொண்டவை.. இந்த புத்தகத்தில் இவர் குறிப்பிட்டிருக்கும் அந்த சர்ச்சைக்குரிய‌ சம்பவம் இதுதான்..
“ஒருநாள் பிற்பகல்.. யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் நானும் எனது புலி நண்பர்களும்.. இருந்த சமயத்தில்..”நான் அதைச் செய்யவில்லை.. நான் அதைச் செய்யவில்லை” என்று அலறிக் கொண்டிருந்த‌ வெள்ளை எனப்படும் இளம் புலி உறுப்பினர் ஒருவரை.. சில ஆண் தோழர்கள் உதைத்து வதைத்து சித்திரவதை செய்து கொண்டிருந்ததைக் கண்டோம்..
வெள்ளையை இந்திய இராணுவத்தின் ஒற்றனாக குற்றம் சுமத்தி.. தோள்வரை மண்ணில் புதைத்து சைனைட்டை விழுங்கும்படி சில சிரேஸ்ட புலி உறுப்பினர்கள் பலவந்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்…. அது அவனை என்ன செய்யும் என்று பார்ப்பதற்காக.. நானும் சில பெண் புலி உறுப்பினர்களும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தோம்..
கடைசியாக “கொரில்லா ஜஸ்டின்” என்னும் ஒரு புலி போராளி.. வெள்ளையின் தலையில் கோடரியால் ஒரு போடுபோட்டார்.. அவ்வளவுதான் அங்கே கூடி நின்ற மற்றைய புலி போராளிகள் எல்லோரும் கொல்லென்று சிரிப்பொலி எழுப்பினார்கள்.. அவர்களைப் பொறுத்தளவில் வெள்ளையை கொல்வதற்கும் கரப்பான் பூச்சியைக் கொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது என்று அந்த‌ கொலையாளிகளைப் பற்றி நிரோமி குறிப்பிட்டிருக்கிறார்….
சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சித்திரவதை கொலையில் இருந்து‍.. புலிகள் அமைப்புக்குள் இப்படிப்பட்ட ஒரு கொலை வழிமுறை இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது.. ஆகவே போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் பலமிழந்து போயிருந்த நிலையில்.. புலிகளின் தலைமைப் பதவி மேல் குறி வைத்திருந்த ஒரு சிரேஸ்ட உறுப்பினர் குழுவொன்று.. அவரை இப்படி கோடரியால் தலையில் கொத்தி கொலை செய்யும் தங்கள் பழைய பழி வாங்கும் பாணியை கையாண்டு அவரின் கதையை முடித்திருக்கலாம்…
பிரபாகரன் இறந்த சமயத்தில்.. அவரது உடல் பல வடிவங்களில் புகைப் படங்களாக வெளி வந்திருந்தது.. அதில் எது முதலில் எடுக்கப்பட்டது என்பது எவருக்குமே ஊகிக்க முடியாதபடி இருக்கிறது.. இதில் ஒரு படத்தில் உடல் முழுவதும் சாம்பல் நிற மண் பூசியபடி வெறும் கோவணத்துடன் காட்சியளிக்கும் படமும் வெளியாகியிருந்தது.. சில வேளைகளில் இதுவே பிரபாகரனின் உடலை முதன் முதலில் எடுக்கப்பட்ட படமாகவும் இருக்கலாம்..
ஏனெனில் நிரோமி டி சொய்சா விபரித்த சம்பவத்தில்.. வெள்ளை என்ற‌ அந்த வாலிபனை முதலில் மண்ணில் புதைத்து.. சயனைட்டை விழுங்க வைத்து இறுதியில்தான் தலையில் கோடரியால் கொத்தினார்கள் என்று குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும்போது.. பிரபாகரனையும் அன்று வெள்ளையை கொலை செய்த அதே பாணியில் அவரை ஆடையில்லாமல் வெறும் கோவணத்துடன் மண்ணில் புதைத்து.. சயனைட்டை விழுங்க வைத்து.. இறுதியில் கோடரியால் தலையில் கொத்தி கொலை செய்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது…
மேலும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் வன்னியில் சதா குண்டுகள் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தால்.. அந்த பிரதேசம் முழுவதும் நெருப்பும்.. புகையும்.. கரியுமாகவே காட்சியளித்தது.. அப்படிப்பட்ட ஒரு மண்ணில் பிரபாகரனை புதைத்து இப்படி கொலை செய்திருந்தால்.. அவர் உடலில் நிட்சயமாக இப்படிப்பட்ட‌ கருமை பூத்த சேற்று மணல் ஒட்டிக் கொள்ளும் சாத்தியம் இருந்திருக்கிறது….
மேலும் பிரபாகரனை தாங்கள்தான் கொலை செய்தோம் என்று இலங்கை இராணுவம் உறுதி செய்ததில்லை.. சில போராளிகளுடன் அவர் தப்பொயோடும்போது குண்டொன்று வெடித்துச் சிதறியதால் மரணமடைந்தார் என்றும்.. பின்னர் அவரது உடல் நந்திக் கடல் ஓரமாக கண்டெடுக்கப்பட்டது என்றும்தான் கூறப்பட்டது..
மேலும் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதை உலகிற்கும் உறுதிப்படுத்தி அடையாளம் காட்டும் முகமாக.. முகச்சவரம் கூட செய்யப்படாத நிலையில் இருந்த பிரபாகரன் உடலுக்கு முகச் சவரம் செய்து புலிகளின் சீருடை தரித்து புகைப்படமும்.. வீடியோ காட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கலாம்.. மேலும் வெள்ளை என்ற வாலிபனுக்கு முதலில் சயனட் கொடுத்ததுபோல் பிரபாகரனுக்கும் சயனைட் கொடுக்கப்பட்டிருக்கிறதா.. என்பதை உறுதிப்படுத்த அவர் உடலில் எந்த விதமான‌ பிரேத பரிசோதனைகளும்நடத்தப்படவில்லை.. சில வேளைகளில் அது மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டிருக்கலாம்..
மேலும் அந்த உடல் நந்திக் கடலில் கிடந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறுமிடத்தில்.. பிரபாகரன் அணிந்திருந்த அந்த யூனிபோர்மில் தண்ணீரில் ஊறிய எந்த அடையாளமும் காணப்படவில்லை‍‍.. அது கசங்காமல் மிகவும் நேர்த்தியாக இருந்தது இங்கே குறிப்பிடத் தக்கது..
பிரபாகரன் புலிகளால் கொல்லப்பட்ட விபரம் சிலவேளை இலங்கை அரசாங்கம் அறிந்திருந்தாலும் அதை வெளியில் சொல்வதற்கு தயக்கமே காட்டும்.. காரணம் பிரபாகரனை புலிகள்தான் கொன்றிருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால்.. அதனால் தங்கள் வெற்றியின் இமேஜ் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்திலும் அந்த விவகாரம் மறைக்கப்பட்டிருக்கலாம்…. அதனால்தான் பிரபாகரன் தப்பியோடும்போது குண்டு வெடித்து மரணமடைந்தார் என்று இலங்கை அரசாங்கம் கூறியிருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன..
நடந்து முடிந்த இந்த போரில் முக்கியமாக கவனிக்கப் வேண்டிய இன்னொரு விடயமும் இருக்கிறது.. .இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டமானின் பெயர் இடம் பெற்றிருந்தாலும்.. அவர் இறந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.. ஆகவே அவரேதான் பிரபாகரனின் அந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவரை கொன்றுவிட்டு தனது கூட்டத்தினருடன் தப்பிச் சென்றிருக்கலாம்..
lttepottan1பொட்டம்மான் உண்மையில் மிகுந்த திறமைசாலி.. கொழும்பில் காற்றுக்கூட புக முடியாத இடங்களில் அவர் நடத்திய பல படுகொலைகள் அவர் திறமைக்கு எடுத்துக் காட்டாக இருந்து வருகின்றன.. அப்படிப்பட்டவர் அந்த இறுக்கமான போர் சூழலிலும் தப்பிச் செல்வதற்கு ஏதோ ஒரு வழியை கண்டு பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது…
ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர் தப்பிச் செல்வதற்கு முன் பிரபாகரனின் கதையை முடித்து.. அந்த தலைமை பதவியை கைப்பற்றி.. எதிர்காலத்தில் தனக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய‌.. எஞ்சியிருக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கதையையும் முடித்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம்.. அல்லது போர்க்களத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம்..
தலையில் கொத்திக் கொலை செய்யும் வழிமுறை சுமார் 25 வருடங்களுக்கு முன் புலிகளால் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது என்பதை நிரோமியின் புத்தகத்தில் இருந்து அறிய முடிகிறது.. ஆகவே அந்த நாட்களில் சித்திரவதைகளுக்கு பேர் போன பொட்டம்மான்.. அந்த வழியை கடைப் பிடித்து பிரபாகரனை தீர்த்துக் கட்டியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன..
மேலும் இன்று வரை வெளி நாட்டுப் புலிகளின் ஒரு பகுதியினர் இன்னும் பொட்டம்மான் உயிருடன் இருப்பதாகவும்.. அவர் வெகு விரைவில் புலிகளின் தலைமையை ஏற்று அடுத்த கட்ட போரை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறி வருவதில் இருந்து இந்த சந்தேகம் மேலும் வலுப் பெற வாய்ப்பிருக்கிறது…
மேலும் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அனரனி ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்ட நிலையில்.. கடைசியாக எஞ்சியிருக்கும் பிரபாகரனின் கடைசி மகனான பாலச்சந்திரன் எதிர்காலத்தில் தனக்கு எதிராக செயல்பட்டு தன்னை பழிக்குப் பழி வாங்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் அவருடைய கதையையும் பொட்டம்மானோ அல்லது அவரைப் போலவே திட்டமிட்டிருந்த‌ வேறு எவரோ கூட பாலச்சந்திரனின் கதையை முடித்திருக்கலாம்..
தாங்கள் செய்யும் படுகொலைகளை தந்திரமாக அரசாங்கத்தின் தலையில் சுமத்தி விடும் திறமையுள்ள‌ புலிகள்.. அவரை கொல்வதற்கு முன்.. ஒரு பதுங்கு குழிக்குள் அந்த இறுதி நேர புகைப்படத்தை எடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது… அப்படி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அது ஒரு இலங்கை இராணுவ சிப்பாய்தான் எடுத்தார் என்று கூறவும் முடியும்.. ஏனெனில் அந்த படத்தில் இலங்கை இராணுத்தில் ஒருவரோ அல்லது புலிகளை சேர்ந்தவர்கள் எவருமோ காணப்படாமல்.. பாலச்சந்திரன் மட்டுமே தனித்திருக்கும் ஆதாரமற்ற ஒரு புகைப்படமாகவே அது இருந்து வருகிறது…
அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறி வரும் அரசாங்க தரப்பின் கூற்றை ஆராய்ந்து பார்க்கும்போது.. சிலவேளைகளில் அவர்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.. ஏனெனில்.. கடல் புலி தளபதி சூசையை சுட்டுக் கொன்ற இராணுவம் அவரது மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்யவில்லை.. இன்று வரை அவர்கள் அனைவரும் இராணுவத்தின் பாதுகாப்பில் நலமாகவே இருந்து வருகிறார்கள்.. மேலும் சூசையின் பிள்ளைகளுக்கு அவர்கள் கல்வியை மேற்கொண்டு தொடர்வதற்கு இலங்கை அரசாங்கம் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறது..
அது மட்டுமல்ல‌.. போர் வலயங்களில் கைது செய்யப்பட்ட புலிகளின் பதினைந்து பதினாறு வயது நிரம்பிய பல இளம் புலிப் போராளிகளை இலங்கை இராணுவம் கொலை செய்யாமல் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து வருகிறது .. இப்படிப் பார்க்கும்போது இலங்கை இராணுவம் பிரபாகரனின் மகனை மட்டும் எதற்காக கொல்ல வேண்டும்? என்று கேட்கவும் இடமிருக்கிறது…
புலிகள் அமைப்பு அப்படியொன்றும் ஒரு கட்டுக் கோப்பான அமைப்பு அல்ல.. அவர்கள் இருந்த காலத்தில்.. அவர்களுக்குள்ளும் தலைமை போட்டிகள் தாராளமாகவே நடைபெற்றிருக்கின்றன.. அவர்களும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதிலும்.. போட்டுத் தள்ளுவதிலும் சளைத்தவர்கள் அல்ல‌ர் என்பதை பல சம்பவங்கள் மூலம் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்….
பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்த மாத்தையா பிரபாகரனைப் போல் இரக்கமில்லாமல் பல படுகொலைகளை புரிந்தவர்தான்.. குறிப்பாக விதம் விதமாக சித்திரவதை செய்து கொலை செய்வதில் பொட்டமானுக்கு நிகரானவர்…. பிரபாகரனின் அடுத்த இடத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த கேணர் கிட்டுவுக்கு.. குண்டு வைத்து அவரை கொலை செய்ய எடுத்த முயற்சி.. கிட்டுவுக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போன கதையாக.. அவருடைய ஒரு காலை மட்டும் இழக்க வைத்து.. மற்ற அங்கங்களுடன் உயிர் பிழைக்க வைத்தது….
அடுத்த முயற்சியாக புலித் தலைமையை கைப்பற்ற மாத்தையா போட்ட சதித் திட்டமும் கண்டு பிடிக்கப்பட்டு.. அந்த சதியும் தவிடு பொடியாகி.. அவரும் அவருக்கு ஆதரவான 260 புலிப் போராளிகளும் பிரபாகரனால் கைது செய்யப்பட்டு பல சித்திரவதைகளின் பின்னர் வன்னிக் காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.. மாத்தையாவை பிரபாகரனே தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது..
ltte.pirabakaran-and-karuna
அதேபோல் கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் ஏற்பட்ட தலைமையை பிரித்துக் கொள்ளும் போட்டியில்.. கருணா பிரபாகரனால் குறி வைக்கப்பட்டார்.. ஆகவே தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அவர் அரசாங்கத்துடன் இணைந்து இன்று அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.. அதே போல‌ பிரபாகரனின் மறைவிற்கு பின் அந்த பதவியை குறி வைத்து தானே தமிழீழத் தலைவர் என்று அறிவித்த‌ கே‍.பியும் தனது உயிருக்கு இலங்கை அரசாங்கத்தால் ஆபத்து என்றதும் அரசாங்கத்துடன் சேர்ந்து வசதியாக வாழ பழகிக் கொண்டார்.. இப்படி பல உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும்..
2007 நவம்பர் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இலங்கை கிபீர் விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.. இந்த தாக்குதல் அதிகாலை வேளையில்.. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான‌ கிளிநொச்சியில்.. மிகவும் இரகசியமான இடமொன்றில்.. கொன்கிறீட் சுவரினால் மிகுந்த‌ பாதுகாப்புடன் அமைக்கப்படிருந்த‌ ஒரு பதுங்கு குளியொன்றினுள் படுத்துறங்கிக் கொண்டிருந்த‌ தமிழ்ச் செல்வனை துல்லியமாக‌ குறிவைத்து இலங்கை விமானப்படையினரால் நடத்தப்பட்டிருந்தது..
அப்படியானால் அந்த அதிகாலை வேளையில் அந்த இடத்தில் தமிழ்ச்செல்வன் பதுங்கியிருக்கிறார் என்ற விபரத்தை இலங்கை விமானப்படையிருக்கு அறிவித்தவர் யார்?
முழுக்க முழுக்க புலிகளின் அமைப்புக்குள் இரகசியமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பினருக்கு மட்டுமே தமிழ்ச்செல்வனின் இரகசிய‌ நடவடிக்கைகள் அனைத்தையும் நன்கு அறியும் வாய்ப்பு இருந்திருக்கிறது.. மேலும் தனி ஒருவரால் இந்த காட்டிக் கொடுப்பை வெற்றிகரமாக நடத்தியிருக்க‌ முடியாது…. ஆகவே அது ஒரு குழுவினரின் கூட்டு முயற்சியின் மூலமே அன்று தமிழ்ச்செல்வன் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார் என்பது கண்கூடு..
இதிலிருந்து விடுதலை புலிகள் என்பது ஒரு கட்டுக் கோப்பான ஒற்றுமையுள்ள அமைப்பல்ல என்பதை உறுதிப்படுத்த முடியும்.. பிரபாகரனின் மறைவிற்கு பின்னர்கூட வெளிநாடுகளில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆளுக்காள் குழி பறிப்பதும்.. குத்து வெட்டு கொலைகள் புரிவதிலும்தான் தங்கள் தமிழீழ தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இதுதான் அன்று தொட்டு இன்றுவரை இருந்து வரும் புலிகளின் வழிமுறையாகும்..
மொத்தத்தில் தமிழீம் என்பது புலிகளின் ஒரு இலட்சியமல்ல‌.. அது இலங்கை தமிழர்களை முட்டாள்களாக்கி அவர்கள் வாக்குகளை பெறுவதற்காக.. த‌மிழர் விடுதலை கூட்டணியினரால் அவர்கள் தலையின் மேல் சுமத்தப்பட்ட ஒரு சுமை.. பின்னர் அந்த விடுதலை கூட்டணியினரை கொன்றொழித்து விட்டு அந்த தமிழீழ சின்னத்தை பறித்துக் கொண்ட புலிகள் அதை வியாபாரமாக்கினார்கள்.. அதன் விளைவாக அவர்களுக்குள் நடைபெற்று வந்ததெல்லாம் அதன் தலைமைப் பதவிக்கான இழுபறியேயல்லாமல் வேறொன்றுமில்லை…
சர்வதேச ஸ்கொட்லாண்ட் பொலிசார் ஒரு சர்ச்சைக்குரிய படுகொலையை துப்புத் துலக்க முற்படும்போது.. முன்னர் இதுபோல நடந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட‌ இன்னொரு படுகொலையுடன் அதை ஒப்பிட்டு இந்த படுகொலைக்கான காரணத்தை கண்டு பிடிக்க முற்படுவது போல.. இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்தையும் அதனால் கொல்லப்பட்ட அதன் தலைவர்களையும் பற்றிய பல முடிச்சவிழ்க்க முடியாத சந்தேகங்களை.. கடந்த காலமொன்றில் அதேபோன்றதொரு சூழலில் நடத்தப்பட்ட இன்னொரு விடுதலை போராட்டத்துடன் ஒப்பிட்டு ஓரளவுக்கு அந்த சந்தேகங்களுக்கு நிவர்த்தி காண முடியும்..
இலங்கையில் நடந்த போராட்டம் போலவே எழுபதாம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு விடுதலை போராட்டம்தான் பங்காளதேஷ் விடுதலை போராட்டமும்.. அங்கும் இலங்கை தமிழர்கள் சிங்கள அரசாங்களிடன் அடிமைப்பட்டுக் கிடந்தது போலவே.. அவர்களும் மேற்கு பாகிஸ்தானிடம் அடிமைப்பட்டு கிடந்தார்கள்.. இங்கு போலவே அங்கும் மேற்கு பாகிஸ்தான் அன்றைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்காளதேஷில் தனது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தது..
இந்த கால கட்டத்தில்.. தற்போது உருத்திரகுமாரின் தலைமையில் அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழம் போலவே.. அன்றும் சில பங்காளதேசிகளால் இந்தியாவில் வைத்து நாடு கடந்த வங்காளதேசம் அறிவிக்கப்பட்டது.. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை..
இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி தங்கத்துரை முதலியோர் கொல்லப்பட்டது போலவே.. முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த பின்.. பங்காளதேஷின் உப ஜனதிபதி.. பிரதம மந்திரி.. மற்றும் விடுதலைக்காக குரல் கொடுத்த பலர் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயும் படு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்..
பின்னர் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் தலையீட்டினால் அவர்களுக்கு விமோசனம் கிடைத்து.. சுதந்திர வங்காள தேசம் மலர்ந்தது….. ஆனால் இங்கே ராஜீவ் காந்தியின் தலையீட்டினால் கிடைக்க இருந்த தமிழர்களின் சுதந்திர தேசம்.. பிரபாகரனின் தலைக் கனத்தினால் பறி போனது.. இப்படியாக அங்கும் இங்கும் ஒரே மாதிரியான அரசியல் நிகழ்வுகளே அரங்கேறியிருக்கின்றன…
பங்காளதேஷில் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் நடந்த விடுதலை போரில்.. சுமார் ஒரு கோடி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.. சுமார் பத்து கோடி பங்காளதேசிகள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்கள்.. சுமார் ஐந்து இலட்ச‌ம் பெண்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர்.. இவர்களில் பெரும்பாலானோர் அந்த தேசத்தில் வாழ்ந்து வந்த‌ இந்து பெண்களாவார்….
பாகிஸ்தான் இராணுவம் இந்துமத பெண்களையே தேடித் தேடி கற்பளித்ததாக கூறப்படுகிறது.. வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.. பெரிய் நகரங்கள் தரை மட்டமாக்கப்பட்டன்.. பெரிய அங்காடிகள் முதல் சிறிய கடைகள் வரை பாகிஸ்தான் இராணுவத்தினரால் சூறையாடப்பட்டன.. இப்படியாக பாரிய அழிவை சந்தித்தது அந்த தேசம்..
இந்த நிலைமைகளை கண்டு கொதித்தெழுந்த இந்திரா காந்தி தனது இந்திய இராணுவத்தை அங்கே அனுப்பி.. பாகிஸ்தான் படையினரை புரட்டியெடுத்து விரட்டியடித்தார்.. பங்காளதேஸ் விடுதலையடைந்தது.. அதன் பின்னர் அந்த சுதந்திர பங்காளதேஷில் அமைதி நிலவியதா?.. இல்லை.. எவர்கள் அந்த நாட்டின் விடுதலைக்காக போரிட்டு அந்த நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுத்தார்களோ.. அவர்களே அந்த நாட்டின் தலைமை பதவிக்காக‌ ஒருவரை ஒருவர் கொன்றொழித்தார்கள்.. அதில் முதலாவதாக குறி வைக்கப்பட்டவர்தான் அதன் வெற்றிக்கு காரணமாக இருந்த முஜிபுர் ரஹ்மான்..
முஜிபுர் ரஹ்மானை அவரது வீட்டில் வைத்து கொலை செய்தபோது.. அவருடன் சேர்த்து அவரது மனைவி.. மூன்று மகன்கள்.. இரண்டு மருமகள்கள்மார் என்று மொத்தமாக ஏழு பேர் கொல்லப்பட்டார்கள்.. அத்துடன் அவரது சகோதரரும் அவர் குடும்பமும்.. அவரது சகோதரியும் அவரது குடும்பமும் என்று சுமார் 25 பேருக்கு மேற்பட்ட அவரது நெருங்கிய உறவினர்களும் அன்று கொல்லப்பட்டார்கள்.. இந்த கொலைகளை புரிந்தவர்கள் சாட்சாத் முஜிபுர் ரஹ்மானின் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள்தான்.. இவர்களுக்கு சுதந்திர பங்காளதேஷில் இராணுவ உயர் பதவிகளை வழங்கியிருந்தார் ரஹ்மான்.. இவர்களின் சதித் திட்டத்தினால்தான் அவர்களின் முழுக் குடும்பமும் அன்று கொலை செய்யப்பட்டார்கள்..
தங்கள் உயிருக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படக் கூடாதே என்றுதான் ரஹ்மானின் 11 வயது றூசலையும் அன்று கொலை செய்தார்கள்.. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரது வயது 49 ஆக இருந்திருக்கும்.. அன்று அவரை கொலை செய்தவர்கள்.. அவரை உயிருடன் விட்டு வைத்திருந்தால்.. சில வேளை அவர் இவர்களை எதிர்காலத்தில் பழிக்குப் பழி வாங்கியிருப்பார் என்பதை மறுக்க முடியாது..
ஏனெனின் இந்த படுகொலை சம்பவத்தின்போது மேற்கு ஜேர்மனியில் கல்வி பயின்று கொண்டிருந்த ரஹ்மானின் இரண்டு மகள்களும் உயிர் தப்பியிருந்தார்கள்.. ஆட்சியை கைப்பற்றிய கொலையாளிகள் இவர்கள் இருவரும் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்தார்கள்.. இந்த கொலை நடந்த காலப் பகுதியான 1975 ஆம் ஆண்டு.. ஜேர்மனியில் இருந்த அவரது இரண்டு மகள்களில் மூத்தவரான ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) 26 வயதுதான் ஆகியிருந்தது..
அன்று அதிஸ்டவசமாக உயிர் தப்பிய‌ அந்த மகள்களில் ஒருவர் மூலம்தான் அந்த கொலைகாரர்களின் முடிவு 35 வருடங்களின் பின்னர் எழுதப்பட்டு.. தாங்கள் அனைவரும் தூக்கிக் தொங்கப் போகிறோம் என்பதை அறியாமல் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளி பங்காளதேஷ் ஆட்சியில் ஜனாதிபதியாக வருவதில் தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள்…. .
ஆம் அன்று ரஹ்மானின் இந்த இரண்டு குமாரிகளும் ரஹ்மானுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டிருந்தால் இன்று வரை அந்த கொலைகாரர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.. ஆனால் பல வருடங்களின் பின்னர்.. ரஹ்மானின் குமாரியின் வடிவில்தான் காலன் அவர்களுக்கு குறி வைத்திருக்கிறான் என்பதை.. அவர்களில் எவருமே அன்று கனவிலும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்…….”